'சிஎஸ்கே' அணிக்கு வந்து சேர்ந்த 'புஜாரா'... "ஓஹோ.. அவரு வந்துட்டாரா??... அப்போ உங்களுக்கு தான் பிரச்சன..." வசமாக கோர்த்து விட்ட 'வாசிம் ஜாஃபர்'!!... யார சொல்றாரு??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் ஏலம் சென்னையில் நேற்று சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், பேட்ஸ்மேன்களை விட, ஆல் ரவுண்டர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக தொகைக்கு ஏலம் போயினர்.

இந்த மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்திய வீரர் புஜாராவை தேர்வு செய்த போது, அனைவரும் கை தட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வீரரான புஜாரா, பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் ஆடுவதற்காக முயற்சி செய்து வந்தார். ஆனால், அதற்கு பலன் கிடைக்காமல் போன நிலையில், இந்த முறை சென்னை அணி அவரை ஏலத்தில் எடுத்ததால் அவர் ஒட்டு மொத்தமாக நெகிழ்ந்து போனார்.

டி 20 போட்டிக்கு புஜாராவா என பலர் கிண்டல் செய்தாலும், அவர் நிச்சயம் டி 20 போட்டிகளிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என அவருக்கு ஆதரவாக சிலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புஜாரா சென்னை அணியில் இணைந்ததைக் குறிப்பிட்டு, இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் வேடிக்கையான பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், புஜாரா ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அந்த தொடரின் போது, புஜாராவை அவுட் எடுக்க முடியாமல், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திணறினர். அந்த தொடரில் மட்டும் புஜாரா சுமார் 900 பந்துகளுக்கு மேல் சந்தித்திருந்தார்.
 

 

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் மற்றும் புஜாரா ஆகியோர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர். இதனையடுத்து, ஹேசல்வுட் விரக்தியாக இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்த வாசிம் ஜாஃபர், 'வலைப் பயிற்சியில் மீண்டும் புஜாராவுக்கு பந்து வீச வேண்டும் என்பதை உணர்ந்த தருணம்' என அவர் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு, ஐபிஎல் ரசிகர்களிடையே தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்