“ரூ. 8.25 கோடி கொடுத்து எடுத்த வீரருக்கு ஒரு மேட்ச்ல கூட வாய்ப்பு தரல”.. MI என்ன ப்ளான் தான் இருக்காங்க? விளாசிய முன்னாள் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் ஏலத்தில் அதிக விலை கொடுத்த எடுக்கப்பட்ட வீரருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து மும்பை அணியை முன்னாள் வீரர் விமர்சனம் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் உள்ளது. அதனால் நடப்பு ஐபிஎல் தொடரிலும் அந்த அணி தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனா; இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி பெரிய சறுக்கலை சந்தித்து வருகிறது.

இதுவரை நடந்து முடிந்த 5 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள மும்பை அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இது அந்த அணியின் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றியை நழுவ விட்டது.

இந்த நிலையில் மும்பை அணியின் வீரர்கள் தேர்வு குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘8.25 கோடி கொடுத்து ஒரு வீரரை வாங்குகிறீர்கள் என்றால் நிச்சயம் அவருக்கு கூடுதலான வாய்ப்பை வழங்கி இருக்க வேண்டும். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஏன் அவரை களமிறக்கவில்லை என்று தெரியவில்லை? அதை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது’ என வாசிம் ஜாபர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிங்கப்பூரை சேர்ந்த கிரிக்கெட் வீரரான டிம் டேவிட், அதிரடி கிரிக்கெட்டிற்கு பெயர் போனவர். உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் இவருக்கு  40 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரை வாங்க அனைத்து அணிகளும் போட்டா போட்டி போட்டன. இறுதியில் 8.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

MUMBAI-INDIANS, IPL, TIM DAVID

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்