"இதுனால தான் அவர் 'ஐபிஎல்' ஒழுங்கா ஆடல..." 'மேக்ஸ்வெல்'லை கிழித்து தொங்க விட்ட 'சேவாக்'... 'பரபரப்பு' சம்பவம்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரான மேக்ஸ்வெல் தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் மற்றும் டி 20 தொடர்களில் சில போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடி ரன் குவித்திருந்தார்.

நேற்று நடைபெற்ற கடைசி டி 20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியிலும் மேக்ஸ்வெல் 54 ரன்கள் அடித்திருந்தார். ஆஸ்திரேலியா அணிக்காக சிறப்பாக ஆடி வரும் மேக்ஸ்வெல், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடிய போது ஒரு போட்டியில் கூட சிறப்பாக ஆடவில்லை.

இந்நிலையில், மேக்ஸ்வெல் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் விமர்சனம் ஒன்றை முன் வைத்துள்ளார். 'ஆஸ்திரேலியா அணிக்காக மேக்ஸ்வெல் ஆடும் போது அவரது ஆட்டமுறை வேறாக உள்ளது. ஒன்றிரண்டு போட்டிகளில் சர்வதேச அணிக்காக ஆடும் போது, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவர் ஆஸ்திரேலிய அணியில் தொடர்ந்து நீடிப்பது கடினமாகலாம்.

ஆனால் ஐபிஎல் போட்டிகளில் அவர் ஆடும் போது எந்தவித நெருக்கடியும் அவருக்கு இல்லை. ஆடும் லெவனில் இடம்பெறாமல் போனாலும் அவருக்கான ஊதியம் வந்து சேரும். அதனால் பொழுது போக்கிற்கு வேண்டித் தான் அவர் ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருகிறார். அணியிலுள்ள வீரர்களை ஊக்குவிப்பது, நடனமாடி சுற்றித் திரிவது என அனைத்தையும் ஐபிஎல் போட்டிகளில் செய்கிறார். ஆனால் ரன்கள் மட்டும் அவர் அடிப்பதில்லை. போட்டி முடிந்தவுடன் பானங்களை வாங்கிக் கொண்டு தனது அறைக்கு சென்று அதை குடிக்கிறார்.

அதனால், அவர் ஐபிஎல் போட்டிகளில் அவ்வளவு தீவிரமாக இருக்கிறார் என்பதை நான் ஒரு போதும் உணரவில்லை. ஐபிஎல் போட்டிகளில் ஆட வரும் போது கிரிக்கெட் போட்டிகளை விட தனது கோல்ஃப் விளையாட்டில் தான் அதிகம் ஆர்வமாக உள்ளார். அப்படி அவர் ஐபிஎல் முக்கியமானதாக கருதியிருந்தால் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்திருக்கும்' என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்