"ஒரு 'கேட்ச்' விட்டதுக்கு இப்படியா சொல்லுவீங்க??..." 'அஜய் ஜடேஜா' சொன்ன கருத்தால் எழுந்த 'சர்ச்சை'... 'கோலி'க்கு ஆதரவாக களமிறங்கிய 'ரசிகர்கள்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை இழந்திருந்த நிலையில், அதன் பிறகு நடைபெற்று வரும் டி 20 தொடரை இந்திய அணி வென்றது.

இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி 20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. முன்னதாக, இரண்டாவது டி  20 போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மேத்யூ வேட் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தார். அப்போது வேட் அடித்த பந்து ஒன்றை விராட் கோலி கேட்ச் செய்ய தவறினார். ஆனாலும், அந்த பந்தை உடனடியாக கீப்பர் ராகுலிடம் அவர் வீச, வேட் ரன் அவுட் செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த சுற்றுப்பயணத்தில் கோலி இதற்கு முன்னரும் சில கேட்ச்களை தவற விட்டிருந்தார். இந்நிலையில், கோலியின் ஃபீல்டிங்கை குறிப்பிட்டு இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

டி 20 தொடர் முடிவடைந்த பின்னர், இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே பங்கு பெறும் அதன் பிறகு தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவிற்கு குழந்தை பிறக்கவுள்ளதால் அவர் இந்தியா திரும்பவுள்ளார். இதைக் குறிப்பிட்டு பேசிய அஜய் ஜடேஜா, இந்திய அணியை விட விராட் கோலிக்கு பிறக்கப் போகும் குழந்தையை நினைத்தால் தான் கவலையாக உள்ளது' என கோலி கேட்ச் விட்டதை பிறக்கப் போகும் குழந்தையுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

அஜய் ஜடேஜா தெரிவித்துள்ள கருத்திற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஒரு கேட்சை தவற விட்டதற்கு குழந்தையை இணைத்து எப்படி கருத்து சொல்லலாம் என்ற ரீதியில் கோலிக்கு ஆதரவாக கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். 








 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்