‘தோத்தது சோகமாக இருக்கு.. இப்பவே வீட்டுக்கு போறோம்’!.. திடீரென வைரலாகும் கோலியின் ‘பழைய’ ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை போட்டியில் நியூஸிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்த நிலையில், கேப்டன் விராட் கோலியின் பழைய ட்வீட் திடீரென வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

டி20 உலகக்கோப்பை தொடரின் 28-வது லீக் போட்டியில் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதின. துபாய் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் நியூஸிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதில் அதிகபட்சமாக ஜடேஜா 26 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 23 ரன்களும் எடுத்தனர். நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளும், இஷ் சோதி 2 விக்கெட்டுகளும், டிம் சவுத்தி மற்றும் ஆடம் மில்னே ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 14.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 49 ரன்களும், கேன் வில்லியம்சன் 33 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 2 விக்கெட்டுகள் எடுத்தார். ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், நேற்றைய நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியிலும் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இந்தியா அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கடந்த 2011-ம் பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், ‘தோல்வியடைந்தது வருத்தமாக உள்ளது. இப்போதே வீட்டுக்கு செல்கிறோம்’ என விராட் கோலி பதிவிட்டுள்ளார். 10 வருடங்களுக்கு முன்பு அவர் பதிவிட்ட ட்வீட்டை, தற்போது பலரும் ரீ-ட்வீட் செய்து வருகின்றனர்.

VIRATKOHLI, INDVNZ, TEAMINDIA, T20WORLDCUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்