கடைசி ஓவரில்.. தினேஷ் கார்த்திக் கிட்ட கோலி காட்டிய சைகை.. விஷயம் தெரிஞ்சு மனம் நெகிழ்ந்த ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இரண்டாவது டி 20 போட்டி நடைபெற்றிருந்த நிலையில், இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி அசத்தி உள்ளது.

Advertising
>
Advertising

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி, தற்போது டி 20 தொடரில் ஆடி வருகிறது.

3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி, கேரள மாநிலம் திருவனந்தபுரம் மைதானத்தில் வைத்து நடைபெற்றிருந்தது.

இந்த போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, இரண்டாவது டி 20 போட்டி, இரு அணிகளுக்கும் இடையே குவஹாத்தியில் வைத்து நடைபெற்றிருந்தது. இந்த போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி ஆடிய இந்திய அணி, தொடக்கம் முதல் கடைசி வரை அதிரடியாக ஆடி ரன் குவித்தது.

அதிகபட்சமாக சூர்யகுமார் 61 ரன்களும் (22 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள்), கே எல் ராகுல் 57 ரன்களும் எடுத்திருந்தனர். ரோஹித், கோலி உள்ளிட்டோரும் தங்களின் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ரன்களை இந்திய அணி குவித்தது.

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, ஆரம்பத்தில் சற்று தடுமாற்றம் கண்டாலும், மில்லர் மற்றும் டி காக் ஆகியோர் கைகோர்த்த பிறகு போட்டியின் போக்கே மாறியது. ஆனாலும், தென் ஆப்பிரிக்க அணியால் 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. டேவிட் மில்லர் 47 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 106 ரன்கள் அடித்து பட்டையைக் கிளப்பி இருந்தார். இருந்தும் வெற்றி வாய்ப்பு கைவிட்டு  போனது.

இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, டி 20 தொடரை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது. இந்நிலையில், போட்டிக்கு இடையே கோலி செய்த விஷயம் தொடர்பான வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, கடைசி ஓவரை தினேஷ் கார்த்திக் எதிர்கொண்டார். மறுபக்கம் 49 ஓவர்களுடன் கோலி நின்று கொண்டிருந்தார்.

முதல் 4 பந்துகளை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக், ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார். அப்போது, நான்கு பந்துகள் முடிந்ததும், கோலி அரை சதமடிக்க வாய்ப்பு தரவா என்பது பற்றி கேட்டதாக சைகையில் தெரிகிறது. ஆனால், கோலியோ நீங்களே ஆடுங்கள் என்பது போல சைகை காட்டினார்.

இதன் பின்னர், ஐந்தாவது பந்தையும் சிக்சருக்கு விரட்டினார் தினேஷ் கார்த்திக். ஒரு வேளை அந்த பந்தில் அவர் சிங்கிள் கொடுத்திருந்தால், கோலி அரை சதமடிக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கலாம். ஆனால், ரன் முக்கியம் என்ற நிலையில், கோலி சிங்கிள் வேண்டாம் என கூறியது தொடர்பான வீடியோ, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்