டாஸ் போடுறப்போவே வார்னர் 'அந்த விஷயத்தை' கணிச்சு சொன்னாரு...! 'நாங்க தான் புரிஞ்சுக்கல...' - கோலி வேதனை...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்றைய (31-10-2020) ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது.

தோல்விக்கு பின் கேப்டன் விராட் கோலி பேசியபோது, டாஸ் நிகழ்வின் போது வார்னர் சொன்னது போலவே இரண்டாம் பாதியில் நடந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் வெறும் 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து சேஸிங் செய்த ஹைதராபாத் அணி 14.1 ஓவரில் மிக எளிதாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வார்னர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அப்போது இரவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் இரண்டாம் பாதியில் பந்து வீசுவது கடினம் என அவர் குறிப்பிட்டார். பெங்களூர் அணி பந்து வீசும் போது வார்னர் கூறியது போலவே நடந்தது.

இந்நிலையில், தோல்விக்கு பின் பேசிய விராட் கோலி பெங்களூர் அணி வீரர்கள் பேட்டிங்கில் தைரியமாக ஆடவில்லை என்றும், ஹைதராபாத் அணியினர் பிட்ச்சை சரியாக பயன்படுத்தினர் என கூறியுள்ளார்.

மேலும், தாங்கள் முதலில் பனிப்பொழிவு இருக்காது என நினைத்ததாகவும், தங்கள் அணியால் அதை சரியாக கணிக்க முடியவில்லை என்றும், ஹைதராபாத் அணி அதை சரியாக கணித்தது தான் அவர்களின் வெற்றிக்கு காரணம். மேலும் கைக்கு வரும் பந்தை பிடிக்கவே முடியவில்லை என்றும் கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்