மாற்றுத்திறனாளி ரசிகரை பார்க்க நேரில் சென்ற ரோஹித் ஷர்மா மற்றும் கோலி.. நெகிழ்ந்துபோன நெட்டிசன்கள்.. வைரலாகும் புகைப்படம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஆகிய இருவரும் இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் ரசிகரை நேரில் சந்தித்திருக்கின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பல்.. பயணத்தை தொடங்கிய கொஞ்ச நேரத்துல அதிகாரிகளுக்கு போன அதிர்ச்சி தகவல்..

ஆசியக்கோப்பை போட்டி

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27 ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் துவங்கியது. முதல் போட்டியில் இலங்கையும் ஆப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை ருசித்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் களம்கண்டன. பொதுவாகவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் உலக அளவில் பரபரப்பை கிளப்புவது உண்டு. நேற்றைய போட்டியும் அப்படித்தான் அமைந்திருந்தது. துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 147 ரங்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து, சேசிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றிபெற்றது.

ரசிகர்

இலங்கையை சேர்ந்தவர் கயான் சேனாநாயக்க. மிகப்பெரும் கிரிக்கெட் ரசிகரான இவர் இலங்கை அணியின் ஆட்டத்தை பார்க்க தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றிருக்கிறார். ஐசிசி கிரிக்கெட் போட்டிகளை தவறாது மைதானத்திற்கு சென்று காணும் கயானுக்கு ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அதுமட்டும் அல்லாமல் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மும்பையில் நடந்த அனுஷ்கா ஷர்மா - விராட் கோலி திருமண வரவேற்பு விழாவில் கயானுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. அப்போது திருமண தம்பதியுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ஒரு நேர்காணலில், இலங்கையின் 2014 உலகக் கோப்பை வெற்றியே தனக்குப் பிடித்தமான போட்டி என கயான் தெரிவித்திருந்தார். மேலும், 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி தன்னுடைய இதயத்தை நொறுங்க செய்த போட்டிகளில் ஒன்று என அவர் குறிப்பிட்டிருந்தார்.

நேரில் சந்திப்பு

இந்நிலையில், பாகிஸ்தான் அணியுடனான போட்டி முடிவடைந்த பிறகு துபாயில் தங்கியிருக்கும் கயானை நேரில் சந்தித்திருக்கின்றனர் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா. இந்நிலையில், கயான் தனது ட்விட்டர் பக்கத்தில்,"ரோஹித் மற்றும் கோலியை இன்று சந்தித்தேன்" எனக் குறிப்பிட்டு இருவருடனும் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார் இந்தப்புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | இந்தியாவின் யூடியூப் கிராமம்.. தொழிலே வீடியோ மேக்கிங் தானாம்.. இப்படியும் ஒரு ஊரா..?

CRICKET, VIRAT KOHLI, ROHIT SHARMA, SPECIALLY ABLED FAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்