'அவர் கொஞ்சம் கோவக்காரரு தான்'... 'ஆனா இந்த விஷயத்துல அடிச்சிக்க முடியாது'... 'மைதானத்தில் கோலி செய்த செயல்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மைதானத்தில் கோலி நடந்து கொண்ட விதம் நெட்டிசன்களை நெகிழச் செய்துள்ளது.

கிரிக்கெட் களத்தில் அதிரடியாக ரன்களை சேர்ப்பதில் இந்திய கேப்டன் விராட் கோலி திறமையானவர். இப்போது கூட இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவைச் சரித்திர சாதனையை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார். ஆனால் மைதானத்தில் அவர் அவ்வப்போது கோபப்படுவது சர்ச்சையை ஏற்படுத்துவதோடு, ரசிகர்கள் மத்தியிலும் சற்று அதிருப்தியை ஏற்படுத்தும்.

ஆனால் தற்போது கோலி செய்த செயலுக்காக நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து வருகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் ஓவல் டெஸ்ட் போட்டியின்போது நடந்துள்ளது. ஆட்டத்திற்குப் பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் என இருவரும் தனித்தனியே பெவிலியன் நோக்கித் திரும்பியுள்ளனர். ஜோ ரூட் முன்னதாகவும், விராட் கோலி பின்னதாகவும் சென்றுள்ளார்.

அந்த நேரம் அவர்கள் கடந்து சென்ற பாதையில் பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று யாரோ தூக்கி வீசியதில் கீழே விழுந்து கிடந்துள்ளது.  அதை ஜோ ரூட் கண்டும் காணாமல் கடந்து சென்ற நிலையில், கோலி கீழே விழுந்திருந்த அந்த பாட்டிலை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அந்த காட்சி அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. அது தற்போது இணையத்தில் வெளியான நிலையில், கோலியின் செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்