இந்த சீசன்ல இதுவரை ‘யாரும்’ பண்ணாத சாதனை.. தமிழக வீரர் ‘வருணை’ வாழ்த்தி சிஎஸ்கே வீரர் போட்ட ‘அசத்தல்’ ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான வருண் சக்கரவர்த்தி சாதனை ஒன்றை படைத்து அசத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 42-வது லீக் போட்டி இன்று (24.10.2020) அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக நிதிஷ் ரானா 81 ரன்களும் சுனில் நரேன் 64 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 47 ரன்களை எடுத்தார்.

இந்தநிலையில் இப்போட்டியில் கொல்கத்தா அணியின் சார்பாக விளையாடும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களை வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இந்த வருட ஐபிஎல் சீசனில் ஒரே போட்டியில் எடுக்கப்பட்ட பந்துவீச்சாளரின் அதிக விக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. வருண் சக்கரவர்த்தின் இந்த சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான ஹர்பஜன் சிங் பாராட்டி ட்விட் செய்துள்ளார்.

மேலும் இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சமீபத்தில் Behindwoods Air மேற்கொண்ட நேர்காணலில் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்