புகார் குடுக்க வந்த 'பொண்ணு' முன்னாடி... போலீஸ் ஒருத்தரு 'சுயஇன்பம்' பண்ணிருக்காரு... உபி-ல நடந்த அதிர்ச்சி 'சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா என்னும் பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையம் ஒன்றில், காவல் அதிகாரி ஒருவர் புகாரளிக்க வந்த பெண் ஒருவரின் முன்னிலையில் சுயஇன்பம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தியோரியா என்னும் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், நில தகராறு தொடர்பாக புகார் ஒன்றை அளிக்க வேண்டி அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அந்த காவலாளி பெண்மணியின் முன்னிலையில், தனது ஆண்குறி மீது கை வைத்து தவறுதலான செயலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அந்த பெண் அதனை கண்டு கொள்ளாமல் இருப்பது போல் இருந்துள்ளார்.

தொடர்ந்து, புகார் தொடர்பாக அந்த பெண்ணிற்கு காவல் நிலையம் செல்ல வேண்டியிருந்த நிலையில், அப்போதும் அந்த போலீஸ் அந்த பெண்ணின் முன்னிலையில் வயது சுயஇன்பம் செய்து வந்துள்ளார். போலீஸ் அதிகாரியின் முகம் சுளிக்க வைக்கும் இந்த நடவடிக்கையால், அந்த பெண் அதிர்ந்து போன நிலையில், அப்பகுதியில் வேறு சில பெண்களிடமும் இது போன்று கீழ்த்தரமாக டந்து கொள்ளும் சம்பவம் அந்த பெண்ணிற்கு தெரிய வர, அவர் மேலும் அதிர்ந்து போயிருக்கிறார்.

இதனால் அந்த காவலாளியை சிக்க வைக்க முடிவு செய்த அந்த பெண், கேமராவை மறைத்து வைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போதும் அந்த போலீஸ் சுயஇன்பம் செய்ய செய்த நிலையில், அதனை அந்த பெண் வீடியோவாக எடுத்து போலீசை சிக்க வைத்துள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி, மிகப்பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து, அப்பகுதி எஸ்.பி குறிப்பிட்ட காவலாளியை சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். புகாரளிக்க வந்த பெண்ணின் முன்னிலையில் போலீசின் இது போன்ற கீழ்த்தரமான செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்