"இன்னும் 2 'மேட்ச்' தான் மீதி இருக்கு... எந்த 'டீம்'க்கு பிளே ஆஃப் போக 'சான்ஸ்' அதிகம்??,,.. தயாரான புது 'table'... அனல் பறக்கும் கட்டத்தில் 'ஐபிஎல்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை மும்பை அணி மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

சென்னை, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகள் வெளியேறியுள்ள நிலையில், பெங்களூர், டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய அணிகளில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போராடி வருகிறது.

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில் 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் கொல்கத்தா அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டாலும் மீதமுள்ள 2 லீக் போட்டிகளின் முடிவைப் பொறுத்துத் தான் கொல்கத்தா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகும்.

இன்று நடைபெறவுள்ள போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெறும். அப்படி ஒரு அணி தோல்வியடையும் பட்சத்தில் அவர்கள் மிகக் குறைந்த வித்தியாசத்தில் தங்களது தோல்வியை பதிவு செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு, பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து தோல்வியடைந்தால், டெல்லி அணி 15 பந்துகள் மீதம் வைத்து வெற்றி இலக்கை அடைய வேண்டும். பெங்களூர் அணி முதலில் பந்து வீசி தோல்வியடைந்தால், 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய வேண்டும்.

மற்றொரு அணியான டெல்லி முதலில் பேட்டிங் செய்து தோல்வியடைந்தால், பெங்களூர் அணி 12 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற வேண்டும். டெல்லி அணி முதலில் பந்து வீசி தோல்வியடைந்தால், பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். 

மேற்கூறிய படி இன்றைய போட்டியில் நிகழ்ந்தால், இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். மாறாக நடந்தால், தோல்வியடையும் அணிக்கு பதிலாக கொல்கத்தா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அப்படி பெங்களூர், டெல்லி அணிகள் அடுத்த சுற்றுக்கு இன்று முன்னேறினால் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் நாளை மோதும் போட்டிக்காக கொல்கத்தா அணி காத்திருக்க வேண்டும்.

இதில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் கொல்கத்தா அணி நடையைக் கட்ட வேண்டியது தான். அதே வேளை, மும்பை அணி வெற்றி பெற்றால் 12 புள்ளிகளுடன் உள்ள ஹைதராபாத் அணி வெளியேறி கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உருவாகும். இதனால், இன்றைய போட்டி கொல்கத்தா அணிக்கு மிக முக்கியமான போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்