திடீரென 'சின்ன' பையனுக்கு எதிராக பொங்கிய ரசிகர்கள்... இப்படி ஒரு காரணமா?... வெளியான உண்மை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதை சென்னை ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்றாலும், ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் சிக்ஸர் மழை பொழிந்து ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார்.

இந்த நிலையில் சஞ்சு சாம்சனின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் இனி இந்திய அணியில் ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு கிடைக்காது என ஆரூடம் கூறி வருகின்றனர். சமீப காலமாக பெரியளவில் ரிஷப் விளையாடவில்லை. அதே நேரம் சாம்சன் அதிரடி காட்டி ராஜஸ்தான் அணியை கரை சேர்த்ததால் அவருக்கு இந்திய அணியில் கண்டிப்பாக இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று சிக்ஸர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 9 சிக்ஸ்களுடன்  74 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இனிவரும் நாட்களில் சஞ்சு, பண்ட் இருவரின் ஆட்டமும் எப்படி இருக்க போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.  

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்