மிஸ்டர் 'பட்லர்'... 'அஸ்வின்'கிட்ட இருந்து தப்பிக்கணும்னா... இத 'ஃபாலோ' பண்ணுங்க... வைரலாகும் 'மான்கட்' சம்பவம்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தற்போது மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், டெல்லி அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், இந்த போட்டியில் டெல்லி அணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் ராஜஸ்தான் அணி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் தொடர்பான மீம்ஸ்களை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வ்ருகின்றனர்.


 

காரணம், கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக ஆடிய அஸ்வின், பட்லரை மான்கட் முறையில் அவுட் செய்திருந்தார். அந்த போட்டியின் திருப்புமுனையாக இந்த விக்கெட் அமைந்த நிலையில், மான்கட் முறையில் அவுட் செய்தது மிகப் பெரும் சர்ச்சையானது. அஸ்வினுக்கு எதிராகவும் பல கருத்துக்கள் வந்தது. 



 

அது மட்டுமில்லாமல், இந்த சீசனிலும் டெல்லி அணி கடைசியாக ஆடிய போட்டியில் பெங்களூர் அணி வீரர் ஆரோன் ஃபிஞ்சை மான்கட் முறையில் அவுட் செய்ய அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அஸ்வின் அதனை செய்யவில்லை. இது தொடர்பாக, 'இது தான் நான் கொடுக்கும் கடைசி எச்சரிக்கை. இனிமேல், மான்கட் முறையில் அவுட் செய்தால் என்னை குற்றம் சொல்லக் கூடாது' என நக்கலாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் மீண்டும் அஸ்வின் மான்கட் முறையில் பட்லரை அவுட் செய்வாரா என்றும், அப்படி அஸ்வினிடம் இருந்து தப்பிக்க பட்லர் எப்படி கிரீசுக்குள் நிற்க வேண்டும் என்பது தொடர்பாக பல ரசிகர்கள் ட்விட்டரில் பல மீம்ஸ்கள் மற்றும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

இது தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்