கோலி உங்களுக்கு என்னதான் ஆச்சு..? மறுபடியும் இப்படி ஏமாத்திட்டீங்களே.. கடுப்பான ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சொதப்பிய விராட் கோலியை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

ஐபிஎல் அணிகளுக்கு வந்த குட் நியூஸ்.. அப்போ அந்த ‘நாட்டு’ ப்ளேயர்ஸை எடுக்க போட்டா போட்டி நடக்குமே..!

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 2 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதனால் 2-0 என்ற கணக்கில் தொடரை தக்க வைத்துள்ளது.

கடைசி ஒருநாள் போட்டி

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று (11.02.2022) அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 13 ரன்களிலும், ஷிகர் தவான் 10 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஏமாற்றிய் விராட் கோலி

இந்த சமயத்தில் களமிறங்கிய விராட் கோலி கை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 பந்தை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். முதல் ஒருநாள் போட்டியில் 8 ரன்னிலும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 18 ரன்களிலும் விராட் கோலி ஆட்டமிழந்தார்.

கடும் விமர்சனம்

இப்படி உள்ள சூழலில் இன்றைய போட்டியில் விராட் கோலி டக் அவுட் ஆனது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது என ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் முன்னாள் வீரர்கள் பலரும் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

‘கண்ணை மூடி திறப்பதற்குள் கோடிஸ்வரர் ஆகிடுவாங்க’.. ஐபிஎல் ஏலத்தில் இந்த ரூல்ஸை கொண்டு வரணும்.. கவாஸ்கர் கொடுத்த புது ஐடியா..!

VIRAT KOHLI, TWO-BALL DUCK, 3RD ODI, WEST INDIES, விராட் கோலி, கடைசி ஒருநாள் போட்டி, இந்தியா-வெஸ்ட் இண்டீஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்