"அவருக்கு ஒரு 'சான்ஸ்' கூட இன்னும் கெடைக்கல ... ப்ளீஸ், 'சிஎஸ்கே' நீங்களாச்சும் உங்க 'டீம்'ல எடுங்க??.." கடுப்பான ''ரசிகர்'கள்... 'காரணம்' என்ன??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள ரஹானே இதுவரை ஒரு போட்டியில் கூட அணியில் இடம்பெறவில்லை.

அதே போல டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வரும் ஷிகர் தவான் இதுவரை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இன்றைய போட்டியில் ஷிகர் தவானுக்கு பதிலாக ரஹானே அணியில் இடம்பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், மீண்டும் தவானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்தது. இன்றைய போட்டியிலும் தவான்  ஓழுங்காக ஆடாமல் அவுட் ஆனார். 



 

இதன் காரணமாக, ரஹானேவுக்கு ஏன் அணியில் இன்னும் இடம் கிடைக்கவில்லை என்று பல நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது மட்டுமில்லாமல், ரஹானேவை சென்னை அல்லது பஞ்சாப் அணிக்காக ஆட வேண்டும் என்றும் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


 

ஐபிஎல் தொடருக்கு நடுவே அணியில் மாற்று வீரர்கள் இடம்பெறும் வாய்ப்பு இருந்தால் ரஹானேவை மற்ற அணிகள் வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்