VIDEO: ‘எப்படி அவரால கேட்க முடியும்?’.. சர்ச்சையை கிளப்பிய சம்பவம்.. கொதித்த ‘இந்திய’ ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிம் பெய்ன் ரிவியூ கேட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 330 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவென் ஸ்மித் 131 ரன்களும், லபுஷங்கே 91 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியை பொறுத்தவரை ஆல்ரவுண்டர் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் நவ்திப் சைனி தலா 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இன்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 96 ரன்களை எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா 26 ரன்களிலும், சுப்மன் ஹில் 50 ரன்களிலும் அவுட்டாகினர். இதனை அடுத்து கேப்டன் ரஹானே மற்றும் புஜாரா ஜோடி விளையாடியது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் நேதன் லயன் வீசிய 40-வது ஓவரின் 4-வது பந்தை ரஹானே காலால் தடுத்தார். உடனே ஆஸ்திரேலிய வீரர்கள் அம்பயரிடம் எல்பிடபுள்யூ கேட்டனர். ஆனால் அம்பயர் எல்பிடபுள்யூ கொடுக்கவில்லை.

இதற்கிடையில் ரிவியூ கேட்டும் 15 வினாடி கால அவகாசமும் முடிந்துவிட்டது. இதற்கு பின் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் ரிவியூ கேட்டார். இது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் ரிவியூவில் ரஹானே நாட் அவுட் என முடிவு வந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்