இதனால்தான் தோனியின் பெயர் பட்டியலில் இல்லையாம்... உண்மையை உடைத்த பி.சி.சி.ஐ...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பி.சி.சி.ஐ.யின் மிக உயர்ந்த அலுவலக பொறுப்பாளர்களில் ஒருவர் தோனியுடன் பேசியுள்ளார். அதில், தோனி செப்டம்பர் 2019 வரை எந்த போட்டியிலும் கலந்துக்கொள்ளவில்லை என்பதால், அவரது பெயரை இப்போதைக்கு சேர்க்க முடியாது என்று அவருக்கு தெளிவாகக் கூறப்பட்டது,” என்று அந்த அதிகாரி மேற்கோளிட்டுள்ளார்.

தோனியுடன் யார் பேசினார்கள் என்று கேட்டபோது, அந்த அதிகாரி வெளிப்படுத்த மறுத்துவிட்டார்.

அதில் “யார் பேசினார்கள் என்பது முக்கியமில்லை. உண்மை என்னவென்றால், அவரை போன்ற அந்தஸ்துள்ள ஒரு வீரருக்கு இப்போதைக்கு ஒரு மத்திய ஒப்பந்தம் வழங்கப்படவில்லை என்றும், அது பொருத்தமான முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் அவரிடம் நாங்கள் தெரிவித்துள்ளோம். " என்று அவர் கூறினார்.

மேலும் , தோனி இந்த ஆண்டு ஆசிய கோப்பை அணியில் இடம் பெற்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போட்டிகளில் விளையாடினால், அவரது பெயர் சேர்க்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்