'ணா ஒரு பொண்ண பாத்தங்ணா.. அவ முகத்துல ரெண்டு கண்ண பாத்தங்ணா'.. 'ஆட்டத்தை கோட்ட விட்டேங்ணா'.. 'முன்னணி வீரர்' சொன்ன 'பலே' காரணம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஜெனிவாவில் நடைபெற்று வரும் லேவர் கோப்பை 2019 டென்னிஸ் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரரான நிக் கிர்ஜியோஸ் மற்றும் ரோஜர் பெடரர் நேருக்கு நேர் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டனர்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் முன்னணி வீரரான ரோஜர் பெடரரை, ஒற்றை ஆளாக எதிர்கொண்ட ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியோஸ் முதல் சுற்றை 7க்கு 6 என்கிற செட் கணக்கில் கைப்பற்றியதன் மூலமாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடினார்.

இதனையடுத்து 2வது சுற்றையும் கிர்ஜியோஸ் சிறப்பாகவே தொடங்கினார். ஆனால் அப்போதுதான் விழித்துக்கொண்டது போல, கிர்ஜியோஸிடம் கடுமையாக போராடி 7க்கு 5 என்கிற செட் கணக்கில் அந்த சுற்றை பெடரர்  தனது வசப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து 3வது சுற்றையும் பெடரர் 10க்கு 7 என்ற செட் கணக்கில் கைப்பற்றி வெற்றி அடைந்தார்.

இதில் தோல்வியடைந்த நிக் கிர்ஜியோஸ், தான் விளையாண்டுக் கொண்டிருக்கும்போது மைதானத்தின் பார்வையாளர்கள் அரங்கத்தில் ஒரு அழகான பெண்ணைப் பார்த்ததாகவும், கட்டினால் அந்த பெண்ணைத் தான் கல்யாணம் கட்டிக்க வேண்டும் என்கிற அளவுக்கு அந்த பெண் தன்னை ஈர்த்ததாகவும் இருந்ததால், கவனம் சிதறிப் போய் ஆட்டத்தை கோட்டை விட்டதாக, தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.

LAVERCUP2019, NICK KYRGIOS, TENNIS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்