‘அடி தூள்’!.. ‘அவர் பெயரும் லிஸ்ட்ல இருக்கு’.. ஒருநாள் தொடருக்கான வீரர்கள் பட்டியலில் ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த பிசிசிஐ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா கோப்பையை கைப்பற்றியது. இதனை அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.

இதுவரை நடந்து முடிந்த 4 டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளுடன் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. கடைசி டி20 போட்டி நாளை (20.03.2021) அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே டி20 கோப்பையை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெற முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வரும் 23-ம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய 4-வது டி20 போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய சூர்யகுமார் யாதவ் இடம்பிடித்துள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடிய இளம் வீரர் பிரசித் கிருஷ்ணாவும் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். இரண்டு புதிய வீரர்களை ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்த்து பிசிசிஐ சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

அதேபோல் நீண்ட நாள்களாக அணியில் இடம் கிடைக்காமல் இருந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் க்ருணல் பாண்ட்யா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். மேலும் தமிழக வீரரான இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நடஜானின் பெயரும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளது.

இதில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பெயர் இடம்பெறவில்லை. இவர் தற்போது விடுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்