T20 WC : 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி... இங்கிலாந்து Vs இலங்கை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய அணி..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

இதில் சூப்பர் குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரு குழுவாக பிரிக்கப்பட்டு சூப்பர் 12 சுற்றில்,  12 அணிகள் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் உள்ள இன்னொரு அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டியிருக்கும். இறுதியில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். இதன் ஒரு அங்கமாக, குரூப் 1 பிரிவிலிருந்து நியூஸிலாந்து அணி தற்போது அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

இதில் இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இன்று (05.11.2022) பலப்பரீட்சை நடத்தின. இந்த இரு அணிகளும் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இங்கிலாந்து அணி 5 புள்ளிகளுடன்3வது இடத்திலும், இலங்கை அணி 4 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் இருந்துவந்தன. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றாலும் அரையறுதிக்கு முன்னேறுவது என்பது நித்தியம் சாத்தியம் இல்லாத ஒன்றுதான்.

ஆனால் அதே வேளையில், அரை இறுதி சுற்றுக்கு இங்கிலாந்து அணி முன்னேற வேண்டும் என்றால், இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்று நெருக்கடியான சூழல் இருந்தது. இதற்கு காரணம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி தற்போது 7 புள்ளிகளுடன் பட்டியலில் 2வது இடத்தை பிடித்ததுதான். இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 7 புள்ளிகள் பெற்று, ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியாவை முந்தி இங்கிலாந்து அணி அரை இறுதிச் சுற்றுக்கும் தகுதி காணலாம் என்கிற சூழல் இருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கிடையேயான இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதில் இலங்கை அணி வீரர் பதுன் நிஷாங்கா அதிரடியாக விளையாடியதுடன், அரைசதம் கடந்து, 5 சிக்சருடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஏனைய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். முடிவில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.  அதிகபட்சமாக மார்க் வூட் 3 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணிக்காக சாய்த்தார்.

இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் இங்கிலாந்து அணி ஆடியது. பின்னர் 19.4 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து இலங்கையை வெற்றிகொண்டது. இதனால் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு செல்ல முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

ENGLAND, T20WORLDCUP22, T20WORLDCUP2022, ENGVSL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்