'நீண்ட இடைவெளிக்கு பிறகு... நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் பங்காளிகள்'!.. டி20 உலகக் கோப்பையில்... ஐசிசி போட்ட மாஸ்டர் ப்ளான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை தொடர் குறித்த முக்கிய அப்டேட்டை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை எமிரேட்சில் நடைபெறவுள்ள பிசிசிஐ நடத்தும் ஐசிசி டி20 உலகக்கோப்பைப் போட்டிகளுக்கான அணிப்பிரிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான் 2ம் பிரிவில் உள்ளன. இதனால் இரு அணிகளும் மோதும் போட்டி இந்த முறை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

12 அணிகள் மோதும் பிரதான சுற்றில் இரண்டாம் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் மற்றும் தகுதிச் சுற்றில் 'குரூப் பி' வின்னர் அணியும், 'குரூப் ஏ' ரன்னர் அணியும் இதே பிரிவில் இடம்பெறும்.

குரூப் 1-ல் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மற்றும் தகுதிச் சூற்றிலிருந்து தகுதி பெறும் குரூப் ஏ வின்னர் மற்றும் குரூப் பி ரன்னர் என்று இரு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

தகுதிச் சுற்றுகள் பிரிவில் 'குரூப் ஏ' அணிகள்: இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா.

தகுதிச் சுற்று 'குரூப் பி' அணிகள் பங்களாதேஷ், ஸ்காட்லாந்து, பபுவா நியுகினி, ஓமன்.

தகுதிச் சுற்றுப் போட்டிகளான முதல் சுற்றுப் போட்டிகள் யுஏஇ மற்றும் ஓமனில் நடைபெறுகின்றன. சூப்பர் 12 பிரதானச் சுற்றுப் போட்டிகள் அபுதாபி, துபாய், ஷார்ஜாவில் நடைபெறும். இவ்வாறு ஐசிசி அறிவித்துள்ளது.

இதில் சூப்பர் 12 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி ஒன்று நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடைபெறுகிறது. இந்த மேட்ச்சுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்