IPL: மேட்ச்க்கு முன்பாக பிரபல கோயிலில் சாமி தரிசனம் செய்த நடராஜன்.. வைரல் போட்டோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

IPL போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் பிரசித்தி பெற்ற கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன், சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர்.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்த நடராஜன், தனது  யாக்கர் பந்துவீச்சால்  பேட்ஸ்மேன்களை திணறடித்தார். இதனால், கடந்த 2020-21  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் நடராஜன் நெட் பவுலராக இடம்பிடித்தார்.

பிரதான வீரர்களின் காயத்தால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நடராஜன் அறிமுகமானார்.

2020 - 2021ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த மூன்று வகையான (டி20, ஒருநாள், டெஸ்ட்) போட்டிகளிலும் அறிமுகமான நடராஜன் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடிந்த பிறகு முழங்கால் காயம் காரணமாக 2021 ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த நடராஜன், கடந்த ஐபிஎல் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் நடராஜன் ஐதராபாத் நகரில் உள்ள ஜெகநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணி மோதும் ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக நடராஜன் சாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்