'நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி'... 'தனிமைப்படுத்தப்பட்ட 6 வீரர்கள்'... 'போட்டிகள் ரத்தாகுமா'?... வெளியான முக்கிய தகவல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடராஜனுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டத்தில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடந்து வந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாகப் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது துபாயில் அனைத்து போட்டிகளும் நடைபெற்று வருகிறது. நேற்றுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் ஐதராபாத் அணியில் இடம் பிடித்துள்ள டி. நடராஜனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  அவருடன் தொடர்பிலிருந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த வீரர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவியதால் ஐ.பி.எல். தொடர் ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்