சஹால் என் ‘பேட்டை’ கேட்டாரு.. அப்போ நான் ஒன்னு சொன்னேன்.. பேட்டியில் பங்கமாய் ‘கலாய்த்த’ சூர்யகுமார்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ், சுழற்பந்து வீச்சாளர் சஹாலின் உடல் அமைப்பு கலாய்த்ததை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் அவர் அறிமுகமானார். அறிமுகமான முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து சூர்யகுமார் யாதவ் அசத்தினார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் சிறப்பானா ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். தற்போது கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊடகங்களுகு அவ்வப்போது சூர்யகுமார் யாதவ் பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தோனியை லெஜண்ட் என்றும், கோலியை இன்ஸ்பிரேஷன் என்றும் ரோஹித் ஷர்மாவை ஹிட்மேன் என்றும் புகழ்ந்து பேசியிருந்தார். அதேபோல் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

அதில், ‘ரொம்பா நாளாக சஹால் எனது பேட்டை தருமாறு கேட்டு வருகிறார். அதை வைத்து களமிறங்கி பார்க்கிறேன் என கூறினார். அப்போது நான், சஹால் உங்க உடம்பு ரொம்ப ஒல்லியா இருக்கு, என் பேட் அதிக வெயிட் இருக்கும். உங்களால் எப்படி தூக்க முடியும் எனக் கூறி கொடுக்க மறுத்துவிட்டேன். ஆனால் அடுத்தமுறை அவரை சந்திக்கும்போது நிச்சயம் பேட்டை தருவேன்’ என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்