"இத்தன நாள் பட்ட கஷ்டம் 'வீண்' போகல... சர்வதேச போட்டியில் கால் பதிக்கவுள்ள 'இந்திய' வீரர்??... 'லேட்டஸ்ட்' தகவலால் 'உச்சகட்ட' எதிர்பார்ப்பில் 'ரசிகர்கள்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து அணியை இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வீழ்த்தியுள்ள நிலையில், டெஸ்ட் தொடர் தற்போது 1 - 1 என்ற சமநிலையில் உள்ளது.

இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ள நிலையில், அதன் பிறகு, 5 டி 20 போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள், இரு அணிகளுக்கும் இடையே நடைபெறவுள்ளது. இதற்கான, இந்திய அணியில் யார் எல்லாம் இடம் பெறுவார்கள் என்பது குறித்து தற்போதே பலவிதமான தகவல்கள் பரவி வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் தற்போது நிகழ்ந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் என இரண்டிலும், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மிகச் சிறப்பாக செயல்பட்டார். தொடர்ந்து, டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அணியில் இடம்பிடித்து வரும் ரிஷப் பண்ட், இந்த முறை இங்கிலாந்து அணிக்கு ஏதிரான ஒரு நாள் மற்றும் டி 20 தொடர்களில் களமிறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அதே போல, ஐபிஎல் தொடர்களில் பல சீசன்களாக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவிற்கு, இதுவரை ஒருமுறை கூட சர்வதேச போட்டியில் ஆடுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. முன்னதாக, கடந்த ஐபிஎல் சீசனில் சூர்யகுமார் யாதவும், விராட் கோலியும் மைதானத்தில் வைத்தே முறைத்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ அதிகம் வைரலாகியிருந்தது.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை ஐபிஎல் மற்றும் முதல் தர போட்டிகளில் வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவிற்கு வேண்டுமென்றே இந்திய அணியில் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், முதல் முறையாக அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரின் மூலம் சர்வதேச போட்டிகளில் கால் பதிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள விஜய் ஹசாரே கோப்பையில் மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் ஆடப் போவதில்லை என கூறப்பட்டு வரும் நிலையில், அவர் பெங்களூரில் யோ யோ டெஸ்டில் கலந்து கொண்டு வருகிறார். இதன் காரணமாக, அவர் கண்டிப்பாக இந்திய அணியில் இணைவார் என தகவல் தெரிவிக்கின்றது.

அப்படி இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், நிச்சயம் அவர் தனது முத்திரையை சர்வதேச போட்டிகளில் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது ரசிகர்களும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்