"திரும்ப வந்துட்டாருங்க அவரு.." ஐபிஎல் தொடரில் மீண்டும் வரும் ரெய்னா.. சென்னை மேட்ச் நடக்குறப்போ சும்மா களை கட்டப் போகுது..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடர், வரும் 26 ஆம் தேதி அன்று ஆரம்பமாகவுள்ளது. போட்டிகள் ஆரம்பிக்க, இன்னும் 4 நாட்களே உள்ளதால், ஐபிஎல் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Advertising
>
Advertising

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள், இந்த முறை அறிமுக போட்டியில் மோதவுள்ளன.

ஒரு பக்கம் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தாலும், இன்னொரு பக்கம் ஐபிஎல் தொடரின் நட்சத்திர வீரர் ஒருவர், இந்த முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் போவது, ரசிகர்கள் மத்தியில் அதிகம் வேதனையை ஏற்படுத்தி இருந்தது.

'நம்பர் 1' ஐபிஎல் வீரர்

சுமார் 10 சீசன்களுக்கு மேலாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடி வந்த சுரேஷ் ரெய்னா, பல போட்டிகளில் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல், ஐபிஎல் தொடரின் 'நம்பர் 1' வீரராகவும் வலம் வந்து, பல அரிய சாதனைகளையும் ஐபிஎல் தொடரில் படைத்துள்ளார் ரெய்னா.

ரெய்னாவ எடுங்க

கடந்த சீசனில், சென்னை அணியில் இடம்பெற்றிருந்த அவரை, ஏலத்திற்கு முன்பாக அந்த அணி விடுவித்திருந்தது. தொடர்ந்து, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில், சென்னை உள்ளிட்ட எந்த அணிகளும் ரெய்னாவை எடுக்க முன் வரவில்லை. இதனால், அவர் 'Unsold' என அறிவிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு, குஜராத் அணியில் இருந்து ஜேசன் ராய் விலகியதும், அவருக்கு பதிலாக ரெய்னாவை குஜராத் அணி எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

ஐபிஎல் தொடரில் பங்கெடுக்கும் ரெய்னா

ஆனால், குஜராத் அணியோ ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஒருவரை, மாற்று வீரராக அறிவித்திருந்தது. இதனால், ஐபிஎல் தொடரில் ரெய்னா பங்கேற்க மாட்டார் என்பது உறுதியானது. இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில், சுரேஷ் ரெய்னா பங்கேற்கவில்லை என்றாலும், இன்னொரு வழியில் ஐபிஎல் தொடருக்காக அவர் பங்கெடுக்க போவது பற்றி, அசத்தல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட 'ட்வீட்'

ஐபிஎல் தொடருக்கான வர்ணனையாளர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா இடம்பெற்றுள்ளார். அது மட்டுமில்லாமல், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் பல ஆண்டுகளுக்கு பிறகு, வர்ணனையில் ஈடுபடவுள்ளார். ஐபிஎல் தொடரில் ரெய்னாவுக்கு, 'Mr. IPL' என்ற பெயரும் உள்ளது. அதனைக் குறிப்பிட்டு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள்ளது.

ரசிகர்கள் ஆவல்

அதே போல, ரவி சாஸ்திரி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இருக்கும் புகைப்படத்தையும் அவர்கள் ட்வீட் செய்துள்ளனர். இதனையடுத்து, ரெய்னாவை ஐபிஎல் போட்டிகளின் வர்ணனையில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். அதே போல, சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியின் போது, ரெய்னா வர்ணனை செய்யவிருப்பதை பார்க்கவும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

SURESHRAINA, CHENNAI-SUPER-KINGS, IPL 2022, CSK, COMMENTARY, சுரேஷ் ரெய்னா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்