சிஎஸ்கே பகிர்ந்த ட்வீட்டில்.. ரெய்னா போட்ட கமெண்ட்.. மனுஷன் பழச இன்னும் மறக்கலபா".. எமோஷனல் ஆன ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா. இடதுகை பேட்ஸ்மேனான இவர், இந்திய அணிக்காக பல போட்டிகளில் தனது சிறந்த பங்களிப்பை ஆற்றி உள்ளார்.

Advertising
>
Advertising

சர்வதேச போட்டிகளில் மட்டுமில்லாமல், ஐபிஎல் தொடரில் சுமார் 10 சீசன்களுக்கு மேலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்கு வகித்து வந்தார்.

Mr IPL என அழைக்கப்பட்டு வந்த சுரேஷ் ரெய்னா, சென்னை அணிக்காக பல சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடி கொடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல், சென்னை அணியில் ஆடி வந்த போது அவருக்கும் தோனிக்கும் இடையே இருந்த நட்பு என்பது மிகவும் அபாரமாக இருந்தது. சில தனிப்பட்ட காரணங்களுக்காக 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருந்த ரெய்னா, 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி இருந்தார்.

இதன் பின்னர், 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக அவரை அணியில் இருந்து விடுவித்திருந்த சிஎஸ்கே, ஏலத்தில் மீண்டும் அவரை எடுக்காமல் போனது. மற்ற அணிகளும் ரெய்னாவை ஏலத்தில் எடுக்க முன் வரவில்லை. இதனைத் தொடர்ந்து வர்ணனையாளராகவும் வலம் வந்த ரெய்னா, அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றிருந்தார். பின்னர், சாலை பாதுகாப்பு தொடரிலும் சச்சின், யுவராஜ் சிங், இர்பான் பதான் உள்ளிட்ட முன்னாள் இந்திய வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் ஆடி இருந்தார் ரெய்னா.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள ட்வீட்டிற்கு ரெய்னா போட்டுள்ள கமெண்ட் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

சென்னை அணி தங்களின் ட்விட்டர் பக்கத்தில் "உங்களின் பேவரைட் ஜெர்சி நம்பர்" என குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தது. இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்தமான கிரிக்கெட் வீரர்களின் ஜெர்சி நம்பரை கமெண்ட் செய்து வந்தனர்.


இதில் கமெண்ட் செய்த ரெய்னா, "7 3 8" என குறிப்பிட்டிருந்தார். இதில் 7 என்பது தோனியின் ஜெர்சி எண் ஆகும். 3 ரெய்னாவுடையதும், 8 ஜடேஜாவுடையதும் ஆகும். இவர்கள் மூவரும் சிஎஸ்கே அணியில் இணைந்து ஆடி உள்ளனர்.

சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய பிறகும், அந்த அணியில் உள்ள தோனி மற்றும் ஜடேஜா ஆகியோரை குறிப்பிட்டு ரெய்னா போட்ட கமெண்ட், தற்போது ரசிகர்கள் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்