"ரெய்னா ஆடுற மேட்ச்'னா மிஸ் பண்ணாம கிரவுண்ட்'ல ஆஜர் ஆயிடுவாரு.." வெறித்தமான ரசிகருக்கு நேர்ந்த துயரம்.. மனம் உடைந்த சின்ன 'தல'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து, தன்னுடைய திறமையால் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்தவர் சுரேஷ் ரெய்னா.

Advertising
>
Advertising

Also Read | குடும்பமா சேர்ந்து கொள்ளை.. "அடிச்ச பணத்துல 2 கோடி ரூபாய்க்கு வீடு.. கூடவே" அதிர வைத்த வாக்குமூலம்

அது மட்டுமில்லாமல், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆடியதன் மூலம், ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகம் பெயர் பெற்றார் சுரேஷ் ரெய்னா.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதால், அவரது ரசிகர்கள் பலரும் கடும் வேதனை அடைந்தனர்.

இருந்த போதும், அவ்வப்போது சுரேஷ் ரெய்னா பகிரும் பதிவுகளையும் ரசிகர்கள் அதிகம் வைரலாக்கி வந்தனர். இந்நிலையில், சுரேஷ் ரெய்னாவின் தீவிர ரசிகராக இருந்து வந்த ஒருவர், தற்போது உயிரிழந்த சம்பவம், பலரையும் கலங்க வைத்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற ரெய்னாவின் வெறித்தனமான ரசிகர் ஒருவர், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக சுரேஷ் ரெய்னா களமிறங்கும் போட்டிகள், சென்னை அணி ஆடும் போட்டிகள் என்றால் தவறாமல் மைதானத்தில் விக்னேஷ் ஆஜராகி விடுவார். அது மட்டுமில்லாமல், உடல் முழுவதும் மஞ்சள் நிற பெயின்ட பூசி, உடலின் முன்னும் பின்னும் ரெய்னாவின் பெயர் மற்றும் ஜெர்சி எண்ணை குறிப்பிட்டு வைத்து, ரெய்னா பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் செய்யும் போது, அவருக்காக ஆர்ப்பரித்து கொண்டாடவும் செய்வார்.

அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த விக்னேஷ், ஒரு சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கண் கலங்கி போன நிலையில், விக்னேஷ் மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், தனது தீவிர ரசிகன் விக்னேஷின் மறைவு தொடர்பாக சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், மனம் வருந்தி ட்வீட் ஒன்றையும் செய்துள்ளார். அவரது பதிவில், "RIP பிரதர், விக்னேஷ். அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு ரசிகர்கள் பேஜின் ட்விட்டர் பதிவில், "இது மிகவும் அதிர்ச்சியான செய்தி. விக்னேஷ் மறைவு பற்றி அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். அவர் ஒரு அற்புதமான மனிதர். ஒரு சூப்பரான ரசிகரும் கூட. RIP விக்னேஷ். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்றும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

ரெய்னாவின் அனைத்து போட்டிகளிலும் தீவிர ரசிகராக தோன்றி, அவரை முழுக்க முழுக்க கொண்டாடிய ரசிகன் விக்னேஷின் மறைவு, பலரையும் மனம் நொறுங்க வைத்துள்ளது.

Also Read | ராத்திரி 2 மணிக்கு கத்திய பூனை.. அரை தூக்கத்துல எழுந்து பார்த்த உரிமையாளர்.. "அடுத்து நடந்தது தான்.." பரபரப்பு சம்பவம்

CRICKET, CSK, SURESH RAINA, SURESH RAINA ARDENT FAN, SURESH RAINA FAN, SURESH RAINA ARDENT FAN PASSED AWAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்