"2024 ஐபிஎல் -லயும் தோனி ஆடுவாரா?".. பிரபல கிரிக்கெட் வீரர் கருத்தால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் தற்போது ஐபிஎல் போட்டியை தான் எதிர்பார்த்து வருகின்றனர். 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், வரும் மார்ச் 31 ஆம் தேதியன்று ஆரம்பமாக உள்ளது.

Advertising
>
Advertising

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | "பந்து அவருகிட்ட மாட்டிக்கிச்சா, இல்ல அவரு பந்துகிட்ட மாட்டிகிட்டாரான்னு தெரியலயே".. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!!

இதன் அறிமுக போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அகமதாபாத் மைதானத்தில் வைத்து மோதுகின்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை புதிதாக அறிமுகமாகி இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி வென்று கோப்பையை கைப்பற்றி இருந்தது. அதே வேளையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஒன்பதாவது இடம்பிடித்து வெளியேறியிருந்தது.

இந்த முறை நிச்சயம் சிஎஸ்கே அணி பழைய ஃபார்மிற்கு திரும்பி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது. இத்தனை நாட்களாக தோனி அன்ட் கோ -வை ஹோம் மைதானத்தில் பார்க்காத ரசிகர்கள் இந்த முறை பார்க்க முடியும் என்பதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

அது மட்டுமில்லாமல் அங்கே நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று நிச்சயம் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றவும் சிஎஸ்கே அணி வீரர்கள் முனைப்பு காட்டுவார்கள் என்று நம்பிக்கையிலும் உள்ளனர். இன்னொரு பக்கம் 42 வயதாகும் தோனி, இந்த ஐபிஎல் தொடருடன் ஒய்வு முடிவை எடுப்பாரா என்ற ஒரு கேள்வியும் உள்ளது. வயதானாலும் தொடர்ந்து அவர் ஃபிட்டாக இருப்பதால் அடுத்தடுத்த சீசன்களில் ஆடுவார் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, தோனி 2024 ஆம் ஐபிஎல் தொடரில் ஆடுவது குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

"அடுத்த ஆண்டும் தோனி ஐபிஎல் போட்டியில் ஆடுவார் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதே வேளையில் அவரது கமிட்மெண்ட் என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். அவர் மிகவும் ஃபிட்டாக இருப்பதுடன் சிறப்பாக பேட்டிங் செய்தும் வருகிறார். அதனால் இந்த ஆண்டு எப்படி ஆடுவார் என்பதை பொறுத்து அது அமையும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

Images are subject to © copyright to their respective owners.

நாங்கள் தற்போதும் அடிக்கடி போனில் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் சென்னை அணிக்காக தீவிரமாக பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் சிறப்பாக ஆடுவதை பார்த்தால் நிச்சயம் நன்றாக ஆடி சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைப்பார் என்றும் தெரிகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | "அட, இப்படியும் ஒரு Maternity ஷூட்டா?".. மொத்த குடும்பத்தையும் ஒரே ஃப்ரேமில் கொண்டு வந்த வாலிபர்.. மனதை நெகிழ வைக்கும் பின்னணி!!

CRICKET, MS DHONI, SURESH RAINA, IPL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்