'அவரு இல்லாம இருக்கறதுதான் டீமுக்கும் நல்லது'... 'ரசிகர்கள் கொண்டாடும் ஸ்டார் பிளேயரை'... 'விளாசித் தள்ளிய பிரபல வீரர்!!!'... 'என்ன காரணம்?!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் சுனில் நரின் மீது கெவின் பீட்டர்சன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. கடந்த போட்டியில் சந்தேகத்துக்குரிய வகையில் பந்தை எறிந்ததாக எழுந்த சர்ச்சையையடுத்து சுனில் நரினுக்கு நேற்றைய போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சுனில் நரின் ஆடும் அணியில் இடம் பிடிக்காதது அணிக்கு பெரிய இழப்பு என கொல்கத்தா அணி ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் சுனில் நரேன் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

சுனில் நரின் குறித்துப் பேசியுள்ள கெவின் பீட்டர்சன், "சுனில் நரேன் இடம் பெறாததால் கேகேஆர் அணிக்கு எந்தவித பெரிய இழப்பும் இல்லை. அவர் சில வருடங்களாகவே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவரை முன்வரிசையில் பேட்டிங் செய்ய களமிறக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. அது அணிக்கும் நல்லதல்ல. ஒரு சுழற்பந்து வீச்சாளராக அவர் கடந்த 3 வருடங்களில் பந்தை நன்றாக சுழலச் செய்யவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்