"நாளைக்குத் தான் 'ஃபைனல்'.. அதுக்குள்ளயே 'start' பண்ணிட்டாங்களா??..." மும்பை அணியை சீண்டிய டெல்லி 'வீரர்'... பரபரப்பு 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய நேற்றைய போட்டியில், ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.

நாளை மும்பை இந்தியன்ஸ் அணியை இறுதி போட்டியில் டெல்லி அணி சந்திக்கவுள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்த நிலையில், தொடக்க ஆட்டக்காரராக ஸ்டோய்னிஸ் களமிறங்கப்பட்டார். அவரும் தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடி ரன் சேர்த்த நிலையில், பவுலிங்கிலும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

இந்நிலையில், போட்டிக்கு பின்னர் பேசிய ஸ்டோய்னிஸ் கையில் ஹல்க் பொம்மை ஒன்றுடன் பேசினார். அதுகுறித்து கேட்ட போது, தன்னை ஒரு ஹல்க் போல எண்ணுவதாகவும், விக்கெட் எடுத்தவுடன் அதே போல கொண்டாடுவதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியை இறுதி போட்டியில் சந்திக்கவுள்ளது குறித்து பேசிய ஸ்டோய்னிஸ், 'மும்பை இந்தியன்ஸ் ஒரு சிறந்த அணி. தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறது. ஆனால் அவர்களுக்கு ஒரு போட்டி தோல்வியடைய பாக்கி உள்ளது' என இறுதி போட்டியில் தாங்கள் வெற்றி பெறப் போவதில் உறுதியாகி இருப்பதாக மறைமுகமாக கூறினார்.

முன்னதாக, இந்த சீசனில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதிய மூன்று போட்டிகளிலும் மும்பை அணியே வெற்றி பெற்றுள்ள நிலையில், மீண்டும் மும்பை அணியே வெற்றி பெறுமா அல்லது டெல்லி அணி பழிக்கு பழி தீர்க்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், இறுதிப் போட்டி குறித்து ஸ்டோய்னிஸ் சொன்ன கருத்து சற்று பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்