'ஒன் மேன் ஆர்மி'யாக அதிரடி காட்டிய 'ஸ்டியோனிஸ்'... கடைசி 'ஓவர்'ல மட்டும் இத்தன ரன்னா??... டெல்லி ஃபேன்ஸ் ஹேப்பி 'அண்ணாச்சி'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி வரும் ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது.

டெல்லி அணி 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில், பின்னர் இணைந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சிறிது நேரம் நிலைத்து நின்றதால், டெல்லி அணி சற்று மீண்டது.

ஆனாலும், அறிமுக பந்து வீச்சாளர் ரவி பிஷ்நோய், ரிஷப்  விக்கெட்டை எடுக்க, ஷமி அடுத்த ஓவரிலேயே ஷ்ரேயாஸ் விக்கெட்டை எடுத்தார். 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி மீண்டும் தவித்த நிலையில், இறுதியில் டெல்லி வீரர் ஸ்டியோனிஸ் அதிரடி ஆட்டம் காட்டினார். இதனால் டெல்லி அணி சிறந்த ஸ்கோரை எட்டியது. 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது.

ஸ்டியோனிஸ் 23 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் குவித்து இறுதி ஓவரில் ரன் அவுட் ஆனார். போட்டியின் ஜோர்டன் வீசிய இறுதி ஓவரில் 30 ரன்களை டெல்லி அணி குவித்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்