‘இதை யாருமே எதிர்பாக்கலையே’!.. இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ‘மாஸ்’ காட்டிய இங்கிலாந்து வீரரை அலேக்கா தூக்கிய SRH..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து வீரரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எடுத்துள்ளது.

14-வது சீசன் ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதனால் ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ன்றனர்.

இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்தார். ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள வீரர்கள் 7 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் 2 மாத காலம் கொரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க வேண்டும்.

இது தனக்கு சோர்வைத் தரும் என்றும், கொரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க விருப்பம் இல்லை என்றும் கூறிய மிட்செல் மார்ஷ், தனது முடிவை பிசிசிஐ மற்றும் சன்ரைசர்ஸ் அணியிடம் மிட்செல் மார்ஷ் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியானது.

இதனால் இவருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராயை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எடுத்துள்ளது. தற்போது நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஜேசன் ராய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். 5 போட்டிகளில் விளையாடிய அவர் 144 ரன்கள் அடித்து அசத்தினார். அதில் 3 போட்டிகளில் 40 ரன்களுக்கு மேல் ஜேசன் ராய் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்