SRH ஆல்ரவுண்டரின் ‘தந்தை’ திடீர் மரணம்.. உடனே நாடு திரும்பும் வீரர்.. சோகத்தில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரரின் தந்தை உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியில் விளையாடி வந்த இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ, திடீரென நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரர் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட்டை (Sherfane Rutherford) மாற்று வீரராக ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்தது.

இவர் சமீபத்தில் நடந்து முடிந்த கரீபியன் டி20 லீக் (CPL) தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் இடம்பெற்றிருந்தார். ஆனால் அப்போது ஒரு போட்டியில் கூட அவருக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், நேற்று துபாய் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இப்போட்டியின் ப்ளேயிங் லெவனில் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் இடம்பெறவில்லை. அடுத்து நடைபெற உள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே ஷெர்பேன் ரதர்ஃபோர்ட்டின் தந்தை இன்று (23.09.2021) திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதனால் பயோ பபுளில் இருந்து வெளியேறிய ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், உடனே நாடு திரும்புகிறார். இதனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது ஹைதராபாத் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்