தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் பகிர்ந்த சோகப் பதிவு..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பிரபல தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் ஒரு சிறுமியின் மரணச் செய்தியை  பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள டேவிட் மில்லர் இந்த துயர செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நட்சத்திரம் டேவிட் மில்லர்  இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சென்றுள்ளார்.

ஒரு சிறுமியின் வீடியோவைப் பகிர்ந்து மிகவும் வேதனையான மரணச் செய்தியை எழுதியுள்ளார். அந்த பதிவில், " "RIP மை டியர் இளவரசி, உன் மீதான அன்பு எப்போதும் இருக்கும்!". என டேவிட் மில்லர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் "உன்னை மிகவும் மிஸ் செய்யப் போகிறேன் மை ஸ்கட்! நான் அறிந்ததிலேயே பெரிய இதயம் நீ. நீ எப்போதும் நம்பமுடியாத அளவிற்கு நேர்மறையாகவும் உன் முகத்தில் புன்னகையுடனும் சண்டையை வேறு நிலைக்கு கொண்டு செல்வாய். உனக்கு ஒரு  குறும்பு பக்கம் உண்டு. உன் பயணத்தில் ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு சவாலையும் ஏற்றுக்கொண்டாய்.

வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நேசிப்பதைப் பற்றி நீ எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தாய்! உன்னுடன் ஒரு பயணம் நடந்ததை நான் தாழ்மையுடன் உணர்கிறேன். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்! RIP" என டேவிட் மில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

DAVID MILLER, SOUTH AFRICA, CRICKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்