ஓய்வு பெறுகிறார்களா சானியா மிர்சா- சோயப் மாலிக்..? கிரிக்கெட்- டென்னிஸ் தம்பதியரின் முடிவு என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நட்சத்திர விளையாட்டு வீரர்களான சானியா மிர்சா- சோயப் மாலிக் தம்பதியினர் அவரவர் விளையாட்டுகளில் இருந்து எப்போது ஓய்வு பெற இருக்கிறார்கள் என்பது குறித்து இருவரும் தங்களது முடிவுகளை தெரிவித்துள்ளனர்.

Advertising
>
Advertising

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஆக விளையாடி வருகிறார் சோயப் மாலிக். இதேபோல், இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையாக சானியா மிர்சா திகழ்ந்து வருகிறார். சோயப் மாலிக்-ன் பெர்ஃபியூம் பிராண்டை அறிமுகம் செய்ய தம்பதியர் பாகிஸ்தானில் கராச்சி நகருக்கு வந்து இருந்தனர்.

அப்போது சானியா மிர்சாவிடம் அவர் எப்போது ஓய்வு பெறுவார் என கேள்வி எழுப்பப்பட்டது. சானியா மிர்சா கூறுகையில், “நான் ஓய்வு பெறுவதற்கு முன்னர் இன்னும் அதிகமான க்ராண்ட்ஸ்லாம்களை வெல்ல வேண்டும் என நினைக்கிறேன். இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணத்தில் இல்லை” எனக் கூறியுள்ளார்.

சானியா மிர்சா இதுவரையில் 6 க்ராண்ட் ஸ்லாம் மெடல்கள், கலவை டபுள்ஸ் பிரிவில் 3 க்ராண்ட் ஸ்லாம்ஸ், டபுள்ஸ் பிரிவில் 3 க்ராண்ட் ஸ்லாம்ஸ் என வென்றுள்ளார். இந்தியாவின் முதல் பெண் டென்னிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.

தனது கிரிக்கெட் பயணத்தில் இருந்து எப்போது ஓய்வு பெற நினைக்கிறார் என சோயப் மாலிக் இடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சோயப், “என்னுடைய முடிவு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் உடன் கலந்து ஆலோசித்தேன். அணியில் நல்ல இளம் வீரர்களைத் தேர்ந்தெடுத்து அணியை வலுப்படுத்துவதற்கு நான் தேவைப்படுவதாகக் கேப்டன் கூறினார். அதனால் ஓய்வு என்பது குறித்து நான் யோசிக்கவே இல்லை” என்றார்.

சானியா மிர்சா- சோயப் மாலிக் தம்பதியருக்கு கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் இஷாஹன் என்ற மகன் உள்ளார்.

CRICKET, SHOAIB MAILK, SANIA MIRZA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்