'நான் யாருக்கும் குறைஞ்சவன் இல்லன்னு ப்ரூஃப் பண்ணிருக்கார்...' - சூர்ய குமாருக்கு சப்போர்ட் செய்யும் பிரபல வீரர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலியை பார்த்து சூர்ய குமார் யாதவ் கோபமாக முறைத்த சம்பவத்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் ட்விட்டரில் கருத்து தெரிவித்து மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த (28-10-2020) அன்று நடந்த பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் கோலியை பார்த்து மும்பை அணியின் சூர்ய குமார் யாதவ் கோபமாக முறைத்துள்ளார். மேலும் கோலியும் சூர்ய குமார் யாதவ் அருகே சென்று அவரை சீண்ட நினைத்தார். விளையாட்டின் நடுவே வெளிப்படையாக நிகழ்ந்த இந்த சம்பவம் பெரிய அளவில் சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த மோதல் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கூறிய கருத்தில், அந்த மேட்ச் மிகவும் சிறப்பாக இருந்தது. அதிலும் சூர்ய குமார் யாதவின் பேட்டிங் அதிரடியாக இருந்தது. விராட் கோலியிடம் சூர்ய குமார் யாதவ் தன்னை நிரூபித்து உள்ளார். நான் யாருக்கும் குறைந்தவன் இல்லை என்பதை சூர்ய குமார் யாதவ் நிரூபித்து உள்ளார்' எனக்குறிப்பிட்டுள்ளார்.

சேவாக் மட்டுமின்றி கிரிஸ் ஸ்ரீகாந்த், ஹர்பஜன் என்று பல முன்னாள் வீரர்கள் சூர்ய குமார் யாதாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். கோலிக்கு ஆதரவாக மூத்த வீரர்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வகையில் புதிய திருப்பமாக சூர்ய குமாருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

மேலும் சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்திய அணி பெயர் பட்டியலில் சூர்ய குமார் யாதவ் பெயர் இடம் கிடைக்காத விரக்தியில் சூர்யகுமார் இப்படி செய்ததாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்