"இந்த பையன நெனச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு..." 'நடராஜன்' பெர்ஃபார்மன்ஸ் மூலம் மெய் சிலிர்த்து போன முன்னாள் 'இந்திய' வீரர்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமான நிலையில், தமிழக வீரர்களான நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகினர்.

ஆஸ்திரேலிய தொடரில் வலைப்பந்து வீச்சாளராக வந்த நடராஜன், ஒரு நாள் போட்டி, டி 20 மற்றும் டெஸ்ட் என மூன்று தொடரிலும் களமிறங்கி தனக்கான தனி முத்திரையை பதித்து அணிஅவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இன்று களமிறங்கிய டெஸ்ட் போட்டியிலும் முதல் நாளிலே இரண்டு விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

அது மட்டுமில்லாமல், மிக குறுகிய காலங்களில் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான இந்திய வீரர் என்ற பெருமையையும் நடராஜன் பெற்றுள்ளார். அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசியதன் மூலமாக தான் அவருக்கு இந்திய அணிக்குள் வலைப் பயிற்சியில் பந்து வீச வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில், டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக ஜொலிக்க ஆரம்பித்துள்ள நடராஜனை இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பாராட்டி ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், 'நடராஜனின் வாழ்க்கை கனவுகளால் அடங்கியது. அவரை நினைக்கையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது' என சேவாக் பெருந்தன்மையுடன் புகழ்ந்துள்ளார்.


நடராஜன் முதல் முதலாக ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடிய போது, சேவாக் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்