"நான் சீக்கிரமா அவுட்டாக காரணம்... அவங்க குடுத்த 'ஐடியா' தான்!!..." ஒரே போடாக போட்ட 'இந்திய' வீரர்... பரபரப்பு 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி கிரிக்கெட் போட்டிகள் ஆடி வரும் நிலையில், டெஸ்ட், டி 20, ஒரு நாள் தொடர் என அனைத்திலும் ஐபிஎல் போட்டிகளில் ஜொலித்த பல இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்திருந்தது.

இதில் டி 20 அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றிருந்தார். மூன்று டி 20 போட்டிகளிலும் களமிறங்கிய சாம்சன், பெரிய அளவில் ரன்கள் குவிக்காத நிலையில் களத்தில் வந்தவுடன் அதிரடியாக ஆடி ஒன்றிரண்டு பவுண்டரிகள் அடித்ததும் உடனடியாக நடையைக் கட்டினார். கிடைத்த வாய்ப்புகளையும் சஞ்சு சாம்சன் சரிவர பயன்படுத்தாமல் உடனடியாக அவர் அவுட்டானதால் அவர் மீது அதிகம் விமர்சனம் வைக்கப்பட்டது.

இந்நிலையில், டி 20 தொடர் முடிந்து தனது சொந்த ஊரான கேரளா திரும்பியுள்ள சஞ்சு சாம்சன் அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 போட்டியில் தனது ஆட்டம் குறித்து பேசிய சஞ்சு சாம்சன், 'இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் சொன்னபடி தான் நான் நடந்து கொண்டேன். நான் மிடில் ஆர்டரில் இறங்கி அதிரடியாக ஆட வேண்டும் என அவர்கள் தெரிவித்தார்கள். விக்கெட் பற்றி கவலைப்படாமல் சிக்ஸர், பவுண்டரிகளை அடிக்க அறிவுறுத்தினர்.

அதனால் தான் அப்படி ஆடினேன். களத்தில் நீண்ட நேரம் நிற்காமல் போனது எனக்கு கவலையில்லை. நான் எனது போக்கில் கவனமாக ஆடியிருந்தால் இன்னும் நிறைய ரன்களை என்னால் குவித்திருக்க முடியும். ஆனால் அணி எதிர்பார்த்தது அது அல்ல' என தெரிவித்துள்ளார். சாம்சன் ஆட்டம் சரியில்லை என்றும், கிடைத்த வாய்ப்பை அவர் சரிவர பயன்படுத்தவில்லை என்றும் விமர்சனங்கள் இருந்து வந்த நிலையில், தனது ஆட்டத்திற்கு காரணம் அணியின் திட்டம் தான் என சஞ்சு சாம்சன் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்