சஞ்சனா ‘கை’-யை யாராவது நோட் பண்ணீங்களா.. வைரலாகும் ‘மெஹந்தி’ போட்டோ.. ஓகோ அதுக்கு இதுதான் காரணமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் தனது கையில் போட்டுள்ள மெஹந்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசனுக்கும் கடந்த திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது. முன்னதாக சொந்த காரணங்களுக்காக பும்ரா விடுப்பு எடுத்துள்ளதாக சமீபத்தில் பிசிசிஐ தெரிவித்தது. இதனை அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்தும் பும்ரா விடுவிக்கப்பட்டார்.

அதனால் பும்ரா விரைவில் திருமணம் செய்ய போவதாக தகவல்கள் பரவின. அப்போது நடிகை அனுபமா பரமேஸ்வரனை பும்ரா திருமணம் செய்ய உள்ளதாக வதந்திகள் பரவி வந்தன. இந்த நிலையில் கோவாவில் வைத்து குடும்பத்தினர் முன்னிலையில் சஞ்சனா கணேசனை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அதில், ‘நீங்கள் தகுதியானவர் என உங்களைக் காதல் கண்டறிந்தால் அது உங்களை இயக்கும். காதலால் இயங்குகிறோம். இருவரும் இணைந்து புதிய பயணத்தைத் தொடங்க இருக்கிறோம். எங்கள் வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சியான நாள். எங்களின் திருமண தகவலையையும், மகிழ்ச்சியையும் உங்களிடம் பகிர்வதால் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம்’ என பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

சஞ்சனா கணேசன் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளார். தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தொகுப்பாளினியாக உள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தொகுப்பாளியாகவும் கடந்த சில வருடங்களாக சஞ்சனா கணேசன் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சஞ்சனா கணேசன் கையில் வரையப்பட்டுள்ள மெஹந்தியில், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை லோகோ இடம்பெற்றுள்ளது.

அதனால் இருவரும் உலகக்கோப்பையின் போதுதான் காதலை வெளிப்படுத்தி இருப்பார்கள், அதற்கு அடையாளமாகதான் உலகக்கோப்பை லோகோவை சஞ்சனா கணேசன் தனது கையில் மெஹந்தியால் வரைந்துள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்