'நல்லா வந்திருக்க வேண்டிய ப்ளேயர் அவரு!'.. ஒவ்வொரு முறையும் சாம்சன் சறுக்கி விழும் இடம் 'இது' தான்!.. இப்போது அடிச்சிருக்கு ஜாக்பாட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவுக்காக தன்னுடைய திறமையை இன்னும் போதிய அளவுக்கு சஞ்சு சாம்சன் நிரூபிக்கவில்லை என முன்னாள் இந்திய வீரர் தெரிவித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் இப்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் 114 போட்டிகளில் 2861 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல 7 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 83 ரன்களை எடுத்துள்ளார்.

இந்நிலையில், சஞ்சு சாம்சன் குறித்து பேசிய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், "அவர் ஐபிஎல்லில் நிறைய ரன்களை சேர்த்திருக்கலாம். ஆனால், இந்தியாவுக்காக அவர் தன்னுடைய திறமையை நிரூபிக்கவில்லை. அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோதும் அவரிடம் 'கன்சிஸ்டென்சி' இல்லை என்ற முத்திரை அவரை பின் தொடர்கிறது" என்று கூறியுள்ளார்.

எனினும், இந்தியா-இலங்கை தொடரில் சாம்சன் இடம்பெற்றுள்ளார் என்பதால், இம்முறை ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று தான் நம்புவதாக வாசீம் ஜாஃபர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்