Video : "நாங்க வெளிய போனாலும்... இப்டி நடந்தது செம 'ஜாலி'யா இருக்கு..." 'சுட்டி' குழந்தைக்கு ரொம்ப தான் குறும்பு போல ..." லைக்குகளை அள்ளும் 'வீடியோ'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

13 ஆவது ஐபிஎல் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு இதுவரை தகுதி பெற்றுள்ளது.

இந்த தொடரில் இருந்து முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியிருந்த நிலையில், தங்களது கடைசி 3 லீக் போட்டிகளில் பெங்களூர், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளை வென்றது. சென்னை அணியின் வெற்றியால் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.

பெங்களூர் அணிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ள நிலையில், அந்த போட்டியில் தோல்வி பெற்றாலும் சிறிய வித்தியாசத்தில் அவர்கள் தோல்வி பெற்றால் தான் பிளே ஆஃப் சுற்று உறுதியாகும். மீதமுள்ள 2 போட்டிகளை பொறுத்து தான் கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதியாகும்.

சென்னை அணி வெளியேறினாலும் தாங்கள் இறுதி லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக பெற்ற வெற்றிகளால் மற்ற அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற தவித்து வருகிறது. இந்நிலையில், நேற்றைய போட்டி முடிவுக்கு பின்னர் பேசிய சென்னை அணி வீரர் சாம் குர்ரன், 'கொல்கத்தா அணியை நாங்கள் தோற்கடித்த போது மற்ற அணிகள் கொண்டாடியது. எங்களின் வெற்றியால் கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இப்போது போராடி வருகிறது. அதே போல தற்போதும் பஞ்சாப் அணியை வீழ்த்தி அவர்களை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத படி செய்து விட்டோம். இது வேடிக்கையாக உள்ளது' என்றார்.

அப்போது போட்டியின் வர்ணனையாளர் இயன் பிஷப், 'மற்ற அணிகளின் கனவுகளை தொலைப்பது உங்களுக்கு குறும்பாக உள்ளது' என்றார். அடுத்து பேசிய சாம், 'சீசனின் தொடக்கத்தில் மற்ற அணிகள் எங்களை தோற்கடித்து எங்களது வாய்ப்பை பறித்தனர். அதே போல தற்போது மற்ற அணிகளை நாங்கள் வீழ்த்தி அவர்களது வாய்ப்பை நாங்கள் பறித்துள்ளோம்' என மகிழ்ச்சியாக தெரிவித்தார்.

இது தொடர்பான வீடியோ தற்போது அதிகம் நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்