VIDEO: ‘விட்டா அடிச்சிருவாரு போல’!.. கடும் கோபமாக ஓடி வந்த ஹர்திக்.. போட்டியை பரபரப்பாக்கிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யாவும், சாம் கர்ரனும் கடுமையாக வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இன்று (26.03.2021) புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்களை குவித்தது.

இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 108 ரன்களும், ரிஷப் பந்த் 77 ரன்களும், கேப்டன் விராட் கோலி 66 ரன்களும் எடுத்தனர். அதேபோல் கடைசி கட்டத்தில் களமிறங்கிய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 35 (4 சிக்சர், 1 பவுண்டரி) ரன்கள் அடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து 337 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் சாம் கர்ரனும், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போட்டியின் 46-வது ஓவரை இங்கிலாந்து இளம்வீரர் சாம் கர்ரன் வீசினார். அந்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 2 சிக்சர்களும், ரிஷப் பந்த 1 சிக்சரும் விளாசினர். தனது ஓவரில் அதிக ரன்கள் சென்றதால் சாம் கர்ரன் சற்றும் கோபம் அடைந்தார்.

இதனை அடுத்து அவர் வீசிய கடைசி பந்தை ஹர்திக் பாண்ட்யா எதிர்கொண்டார். அந்த பால் டாட் பாலாக அமைந்தது. உடனே ஹர்திக் பாண்ட்யாவைப் பார்த்து சாம் கர்ரன் ஏதோ முணுமுணுத்தார். இதைப் பார்த்துக் கோபமடைந்த ஹர்திக் பாண்ட்யா வேகமாக ஓடி வந்து சாம் கர்ரனை திட்டினார்.

இதனால் இருவரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே களத்தில் இருந்த அம்பயர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்