"ஜஸ்ட் மிஸ்ஸு".. 2007 டி 20 WC ஃபைனல் -ல தோனி போட்ட தப்புக்கணக்கு??.. இத்தனை நாள் கழிச்சு வெளிய வந்த விஷயம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி 20 உலக கோப்பையை கைப்பற்றியதை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் நிச்சயம் எளிதில் மறந்து விட முடியாது.

Advertising
>
Advertising

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அஸ்வின் -அ Face பண்ணியே ஆகணுமே".. டூப்ளிகேட் அஸ்வினை கையில் எடுத்த ஆஸ்திரேலியா.. "யாருப்பா இந்த பையன்?

அதே ஆண்டில் ஐம்பது ஓவர் உலக கோப்பைத் தொடரில் லீக் சுற்றில் தோல்வியுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது இந்திய கிரிக்கெட் அணி. டிராவிட், சச்சின், சேவாக் உள்ளிட்ட பல பலம் வாய்ந்த வீரர்கள் இருந்த போதிலும் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது அந்த சமயத்தில் பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்திருந்தது.

இதற்கடுத்து முதல் டி 20 உலக கோப்பைத் தொடர் அறிவிக்கப்பட, தோனி தலைமையிலான இந்திய அணி களமிறங்கி இருந்தது. இதில் சச்சின், சேவாக் உள்ளிட்ட பல வீரர்கள் இல்லாமல் தோனி, கம்பீர், யுவராஜ் உள்ளிட்ட வீரர்கள் இறங்கி இருந்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

முதல் டி 20 உலக கோப்பையிலேயே இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. மறுபக்கம், பாகிஸ்தான் அணி இந்தியாவை இறுதி போட்டியில் எதிர்கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக இந்த போட்டி செல்ல இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணிக்கு கடைசி ஓவரின் 4 பந்தில் கைவசம் ஒரு விக்கெட் இருக்க, வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது.

Images are subject to © copyright to their respective owners.

அந்த பந்தை ஜோகிந்தர் ஷர்மா வீச அதனை எதிர்கொண்ட மிஸ்பா உல் ஹக், ஸ்ரீசாந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணிக்கு கோப்பையையும் வென்றிருந்தது. இத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் 2007 ஆம் ஆண்டு இந்திய அணி டி 20 உலக கோப்பையை வென்றது இன்று வரை பல ரசிகர்களை மனம் நெகிழ வைக்கும் வகையில் உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், இறுதி போட்டியில் நடந்த சம்பவம் குறித்து அப்போது இந்திய அணியில் இடம்பெற்று ஆடியிருந்த ஆர்பி சிங் சில கருத்துக்களை தற்போது தெரிவித்துள்ளார். "20 ஆவது ஓவரை விட 17, 18 மற்றும் 19 ஆவது ஓவர் தான் முக்கியம் என தோனி கருதி இருந்தார். மிஸ்பா கடைசி வரை நிற்பார் என தோனி நினைக்கவில்லை. அவர் விக்கெட்டை கடைசி ஓவருக்கு முன்பே எடுத்து விடலாம் என தோனி நினைத்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

ஆனால், மிஸ்பா சிறப்பாக ஆடி ஹர்பஜன் சிங் வீசிய 17 ஆவது ஓவரில் 3 சிக்ஸர்களை அடித்தார். எனவே அது தவறான கணக்கீடாக இருந்தது. 18 ஆவது ஓவரை ஸ்ரீசாந்த்தும், 19 ஆவது ஓவரை நானும் வீசினோம். ஹர்பஜன் சிங் ரன் கொடுத்திருந்ததால் இறுதி ஓவரை அவருக்கு பதிலாக ஜோகிந்தர் சர்மா வீசினார். ஒருவேளை, இடதுகை பேட்ஸ்மேன் ஆடி இருந்தால் ஹர்பஜன் சிங் தான் பந்து வீசி இருப்பார்" என தெரிவித்துள்ளார்.

Also Read | "அவரு அப்ப சாகல".. 100 வருஷம் முன்னாடி நடந்த குற்றம்.. கடிதங்கள் மூலம் இளம்பெண் கண்டுபிடிச்ச திடுக்கிடும் விஷயம்!!

CRICKET, MS DHONI, RP SINGH, RP SINGH ABOUT MS DHONI, T 20 WORLD CUP FINALS 2007

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்