"என்னது, முதல் ரெண்டு 'மேட்ச்'ல அவரு கிடையாதா??..." 'கோலி' சொன்ன 'விஷயம்'... ஏமாற்றத்தில் 'இந்திய' ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவுள்ள டி 20 போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில், ஐபிஎல் தொடரில் ஜொலித்த சில வீரர்களும் அணியில் இடம்பெற்றிருந்தனர். இதனால், எந்தெந்த வீரர்கள் இன்றைய போட்டியில் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இந்நிலையில், அதிரடி வீரர் ரோஹித் ஷர்மா முதல் இரண்டு போட்டிகளில் களமிறங்க மாட்டார் என்றும், வரவிருக்கும் தொடர்களை கருத்தில் கொண்டு, அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மேலும், சூர்யகுமார் யாதவ் இன்று களமிறங்குவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை. இந்தியாவில் போட்டிகள் நடைபெறுவதால், ரோஹித் ஷர்மா இன்று களமிறங்கி, பட்டையை கிளப்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதனால், ரோஹித் அணியில் இல்லாதது தொடர்பாக கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

















 

மேலும், நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த கேப்டன் கோலி, தொடக்க வீரர்களாக ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா களமிறங்குவார்கள் என்றும், அவர்களில் யாருக்காவது ஓய்வளிக்கப்பட்டால், தவான் களமிறங்குவார் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


அதே போல, கடந்த பல மாதங்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

இன்றைய போட்டியில் ஆடும் இந்திய வீரர்கள் விவரம் : கேஎல் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்த்ர சாஹல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்