உங்க 'குசும்புக்கு' ஒரு அளவே இல்லையா...? அஸ்வின் கிட்ட 'என்ன பேசுனீங்க'ன்னு கேட்டதுக்கு ரோஹித் சொன்ன பதில்...! - சுத்தி நின்னவங்க எல்லாரும் 'வெடிச்சு' சிரிச்சிட்டாங்க...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் பிறகு ரோஹித் ஷர்மா பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்களை வைத்து செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

ஐசிசி டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் மோதியது. இதற்கு முன் இந்தியா விளையாடிய இரு தொடர்களிலும் இந்தியாவிற்கு தொடர் தோல்வி ஏற்பட்டத்தில் கடும் விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா 66 ரன்களில் ஜெயித்தது. அதோடு இந்த ஆட்டத்தின் நாயகனாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுமார் 47 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 69 ரன்கள் குவித்துள்ளார். ஆட்டநாயகன் விருது வாங்கிய ரோகித் சர்மா, நீண்ட நாட்களுக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் பங்குகொண்டார்.

அப்போது அடடா இது தான் பிரஸ் மீட்டா என அங்கு வந்த நிருபர்களை எண்ணிக்கொண்டு இருந்தார். இதனை கண்ட செய்தியாளர்கள் ரோஹித் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை போல பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதன்பின் ரோஹித் சர்மாவிடம், அஸ்வின் கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் ப்ளேயிங் 11-ல் இணைத்துள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் நீங்கள் அஸ்வினிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளீர்களா? என்ன பேசியுள்ளீர்கள் எனக்கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு முகத்தை சீரியஸாக வைத்து கொண்ட ரோகித், ஒரு புன் சிரிப்புடன் 'அஸ்வினுக்கு இரு அழகான குழந்தைகள் உள்ளனர். எனக்கும் அழகான மகள் இருக்கிறாள்  அவர்கள் இருவரையும் எந்த பூங்காவிற்கு அழைத்து செல்லலாம் என தீவிரமாக ஆலோசித்துள்ளோம். ஆனால் ஒருபோதும் போட்டி குறித்து பேசியதில்லை' எனக் கூறினார்.

ரோஹித்தின் இந்த குறும்புதனமான பதிலை கேட்டவுடன் அருகில் இருந்த அனைவரும் சிரித்து தள்ளினர். செய்தியாளர் சந்திப்பின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

ROHIT SHARMA, ASHWIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்