"இன்னும் நெறய இருக்கு..." ட்விட்டரில் 'ரோஹித்' ஷர்மா போட்ட 'கமெண்ட்'... 'உச்சக்கட்ட' எதிர்பார்ப்பில் 'ரசிகர்கள்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் ஷர்மா, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தன்று (டிசம்பர் 13) ஒரு நாள் போட்டியில், தனது மூன்றாவது 200+ ரன்களை இலங்கை அணிக்கு எதிராக அடித்து சாதனை படைத்திருந்தார்.

ஒரு நாள் போட்டியில் ஒரு இரட்டை சதம் அடிப்பதே பெரிதாக உள்ள நிலையில், ரோஹித் ஷர்மா 3 இரட்டை சதங்களை அடித்துள்ளார். முதலாவது இருநூறு ரன்களை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு அடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இலங்கை அணிக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு 264 ரன்களும், 2017 ஆம் ஆண்டு 208 ரன்களும் அடித்திருந்தார். இதில், ரோஹித் ஷர்மாவின் 264 ரன்களே ஒரு நாள் தொடரின் தனி நபர் அதிகபட்சமாக உள்ளது.

ஒரு நாள் தொடரின் அரிய சாதனை ஒன்றை ரோஹித் படைத்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ரோஹித் ஷர்மாவை வாழ்த்தி ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தது. இந்த பதிவின் கீழ் கமெண்ட் செய்த ரோஹித் ஷர்மா, 'இன்னும் நிறைய வரவுள்ளது (more to come)' என குறிப்பிட்டுள்ளார். 



 

கிரிக்கெட் உலகில் பல பேட்ஸ்மேன்களுக்கு ஒரு நாள் போட்டியில் இரட்டைச் சதம் என்பது எட்டாக்கனியாக உள்ள நிலையில், இன்னும் இரட்டை சதங்கள் வரவுள்ளன என்ற ரோஹித் ஷர்மாவின் பதில் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்