கையை பதம்பார்த்த பந்து.. பீல்டிங்கின்போது ஏற்பட்ட காயம்.. மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட ரோஹித்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வங்கதேசம் கிரிக்கெட் அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கையில் காயமடைந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | செல்போனை திருடி சென்ற இளைஞர்.. 1 கிமீ ஓடிச்சென்று பிடித்த பெண் போலீஸ்.. பேருந்து நிலையத்தில் நடந்த பரபர சேசிங்..!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது இரு அணிகளும் விளையாடி வருகின்றன. முதலாவது போட்டியில் வங்கதேசம் வெற்றிபெற்று 1 - 0 எனும் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில், இன்று இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது.

டாக்காவில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி வீரர்கள் 50 ஓவர் முடிவில்7 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை எடுத்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிர்ச்சி கொடுத்தபோதிலும் அந்த அணியின் மஹ்மத்துல்லா மற்றும் மெஹ்தி ஹசன் சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஹசன் சதமடித்து அசத்தினார். இந்திய அணியின் பவுலர்களை பொறுத்தவரையில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் முகமது சிராஜ் வீசிய இரண்டாவது ஓவரை அனமுல் ஹக் எதிர்கொண்டார். அப்போது பந்து அவருடைய பேட்டில் பட்டு எட்ஜ் ஆனது. அது இரண்டாவது ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த ரோஹித் சர்மாவை நோக்கிச் சென்றது. அதனை கேட்ச் எடுக்க ரோஹித் முயற்சிக்க, பந்து அவரது கையில் பட்டு நழுவியது. இதனால் காயமடைந்த ரோஹித் கைகளை உதறியபடி அங்கிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இதுகுறித்த அண்மை தகவலை அளித்திருக்கிறது. அதில், "2வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்யும்போது இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் கட்டை விரலில் அடிபட்டது. பிசிசிஐ மருத்துவக் குழு அவரை பரிசோதித்தது. தற்போது ஸ்கேன் எடுக்க சென்றுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Also Read | தனியாக வாழ்ந்துவந்த பெண் சடலமாக மீட்பு.. ஆரம்பத்துல இருந்தே போலீசுக்கு உறுத்தலாக இருந்த விஷயம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!

CRICKET, ROHIT SHARMA, FIELDING, MATCH, BANGLADESH, ROHIT SHARMA INJURY WHILE FIELDING IN MATCH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்