"என்னையவே எதுக்குங்க focus பண்றீங்க".. கேமராவை பார்த்து ரோஹித் கொடுத்த ரியாக்ஷன்.. சூரியகுமார் சிரிச்சுட்டாப்ல..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேமராவை பார்த்து ரோஹித் ஷர்மா கொடுத்த ரியாக்ஷன் பலரையும் புன்னகைக்க செய்தது.

Advertising
>
Advertising

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | மருத்துவராகும் கனவு.. திருமணம் முடிந்த அடுத்த நிமிஷமே லேப் கோட்டுடன் தேர்வுக்கு போன புதுமணப்பெண்.. வீடியோ..!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரிலும், 3 ஒரு நாள் போட்டி தொடரிலும் இந்திய அணியை எதிர்கொள்கிறது. அந்த வகையில் இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, 177 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர். தொடர்ந்து, முதல் இன்னிங்சில் இந்திய அணி 400 ரங்களுக்கு ஆல் அவுட்டானது.

Images are subject to © copyright to their respective owners.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கிய ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் 91 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இரண்டாவது இன்னிங்க்ஸை பொறுத்தவரையில் இந்திய அணியின் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியை வெற்றிபெற செய்திருந்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்சின் போது சுவாரஸ்ய சம்பவம் ஒன்றும் நடைபெற்றது. 18 ஆவது ஓவரை அஸ்வின் வீச ஆஸி. வீரர் பீட்டர் ஹெட்ஸ்கோம்ப் அதனை எதிர்கொண்டார். அப்போது பந்து அவருடைய பேடில் பட LBW-க்கு இந்திய வீரர்கள் அப்பீல் செய்தனர். ஆனால், நடுவர் ரிச்சர்ட் இல்லிங்ஒர்த் அவுட் கொடுக்கவில்லை.

Images are subject to © copyright to their respective owners.

ஆகவே, இந்திய அணி கேப்டன் ரிவ்யூ எடுத்தார். அப்போது, இந்திய வீரர்கள் முடிவுக்காக காத்திருந்த நிலையில் கேமரா ரோஹித்தை ஃபோகஸ் செய்தது. தொடர்ந்து சில வினாடிகள் தான் திரையில் தெரிந்துகொண்டிருப்பதை பார்த்த ரோஹித், என்னையவே எதுக்குங்க ஃபோகஸ் பண்ணுறீங்க என்பது போல கேமரா மேனை பார்த்து சைகை செய்தார். இதனை கண்டு சூரியகுமார் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் சிரித்துவிட்டனர்.

Also Read | கிரைண்டரில் சிக்கிய துப்பட்டா.. திடீர்னு கேட்ட அலறல் சத்தம்.. பிறந்தநாள் அன்று இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!

CRICKET, ROHIT SHARMA, CAMERA MAN, REVIEW

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்